எழுதுகோல் ஏந்திய
எழுத்தில்லா சித்திரதிற்குள்
புரியா கவியாகிய என்
புதுமைத் தந்துவமே!!
புதுமைக்கு புதுமை சொல்லி
இனிய வாழ்வை எட்ட வைத்து
எட்டவோ நின்றாலும் நீ என்றும்
முழுநிலவோ!!
நிந்தனைகள் நின்மதியை
நித்தம் நிறைத்தாடினாலும்!!
என் மதி யோடு நின்தனை செய்ய
உன் மதியில் நின்றாடும் நின்மதியாய்
வந்தாடும் என் பொழுதுக்குள் நீ என்றும்
முழு நிலவோ!!
விட்டோடிடும் காலத்திலும்
விட்டிடா வலிகள் வந்தாடிடும்
பொழுதுகளில் என்னோடு
புன்னகைக்கா உன் மதியை விரட்டியாட
சொல்லியாடும் என் பொய் கூட
புன்னகைக்காக உன் மதியை வீழ்ந்திட தான்!!!
என்றாலும்!!! நீ என் முழுநிலவோ!!
என்னில் வந்த கனவினை
உன்னில் வைத்து
உன்னோடு விளையாடினாலும்
என்னோடு தோன்றும் கோபம் கூட
கதைபேச கண்ணின்மணி நீ சிரிக்க தான்!!
என் அழகை ரசிக்கா உன் மதியை
ரசிக்கும் என் மனதிற்கு என்றும்
நீ முழு நிலவோ!!!!!!
No comments:
Post a Comment