Friday, 21 August 2009

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பட்டதால் தொட்டு
தொட்டதால் கெட்டு
கெட்டதால் விட்டது ஒரு உறவு!

விட்டதால் தொலைந்து
தொலைத்தாய் தேடி
கோவிலில் அழையுது ஓர் உறவு!

மெந்தையிட்டு வீட்டில்
நின்மதியை உறங்க விட்டு
வீதியில் தேடுது ஒரு உறவு!

உயிரோடு தன்னைத் தொலைத்து
உறவிற்கு உயிலெழுதி
ஒழுங்காய் வாழ  உறவு தேடுது
ஒரு உறவு!

ஒரு உறவை கூட்டில் ஏற்றி
புதிதாய் ஒரு இதயம் வேண்டி
வாழ்வை வாழ ஆசைபடுது ஒரு உறவு.........

No comments: