ராமன் தீயெடுக்க
சீதை குளித்தால் இன்று
இராவணர்கள் தீயெடுக்க
சீதைகள் குளிக்கின்றனர்
இதிகாசம் கண்ட தீயால்
கலியுகமும் குளிக்க
பணகார முதலைகள்
எடுத்த தீயில்
வறுமைத் தவிப்புக்கள்
நித்தம் குளிக்கின்றது
வரதட்சனை மாமியார்
வைத்த தீயில் மருமகள்
மட்டும் குளிக்க
வரன் காணா கன்னியவளை
ஏக்க தீ சுட்டெறித்தால்
மரணத் தீ அவள் குளிக்க
கோழையவன் எடுத்த தீயில்
குடும்பமே குளித்துக் கரைய
கடவுள் அவன் காட்டிய தீ
கருணையில்லா மனிதர்கள்
வைக்கும் தீயானது............
.jpg)
No comments:
Post a Comment