Wednesday, 24 October 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உன்னத பந்தம் ஒன்று
உன்னோடு எனைச் சேர்க்க
உன் கரம் பற்றியதால்
உன் உறவாய் நான் வந்தேன்
உன்னோடு !1
பலர் வாழ்ந்த வாழ்கை  
நமைச்சேர 
இணையான துணையாக
நம் வாழ்வில் நாம் சேர்ந்தோம்
மகிழ்வாய் 
மகிழ்சியாய் சில நாட்கள்
மகிழ்ந்தே போக ,
சத்தியம் தனை செய்து
 ,அன்போடு
எனை அணைத்த, 
இன்ப நாட்கள் 
கசந்ததேன் நமக்கு!! 
இப்போது! 
நம் உறவு புரியவில்லை,
எனக்கும் தான்
 எதுவுமே கூறாமல்
வார்த்தையால் எனைக்
 கொன்று
சாக்கடையாய் நீ 
பார்க்க
என்ன தான் 
நான் செய்தேன்!
இரட்டை வேடம்
 நீ போட்டு
அழகாய் நடிக்க
 உன் வேடம் தெரிந்தும் 
புரியாமல் நான்
தவிந்து இன்னும் வாழ
என்ன பாவம் 
நான் செய்தேனே
தெரியவில்லை எனக்கும்
 தான்!
வில்லனவன் வெளியிலென்றால்
உன்னிடம் சொல்லலாமே
வில்லனோ நீயென்றால்
நான் யாரிடம் 
 தான் சொல்ல
துணையாய் வந்த

 என் அன்பே
நீ கூறு கொஞ்சம்.............

No comments: