Monday, 30 November 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வலிகளிலே பெரியவலி
நீ தரும் மெளனத்தின்
 வலியானது
என் இயத்திற்கு!!
ஏன்னெத்தெரியாத
 ஓர் தவிப்பு
நீயில்லாத பொழுகளில்
 ஏன் வருகின்றது
எனக்கு!!
 இது எதுவென தெரியாத
 வாழ்விற்கும் சாவிற்கும் 
இடையில்
தொலைகின்றேன்!! உன் 
நினைவுகளை அணைத்தபடி
இது!
 என் உயிர்வரை எனப்புரிந்தாலோ!!


Thursday, 12 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிறக்கும் முன் உணரும்
அன்பு
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடை நிற்கும் அன்பு
இருப்பவருக்கு புரியாத
அன்பு
இறந்த பின் தேடியலையும்
அன்பு
இருந்தும் தொலைக்கும் அன்பு
இல்லாவிட்டாலும் தவிக்கும்
அன்பு
மரணம் வந்தே மதிகொண்டு
 மதிக்கம் அன்பு

Wednesday, 11 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

விரக்திக் கதவுகள்
 திறந்திடும்
போது 
தனிமை பக்கங்கள்
எரிதீயுக்குள்
 ஏமாற்ற சுவாலையாக 
எழுந்து எரிகின்றது !!
துணைக்கு வந்த கற்பனை
 நினைவுக்கதவை  மூடும்போது
முளையின் கதவு திறவாமேலோயே 
உணர்வுத்தீணிக்கு 
 ஏக்கதீயால் சாபமிடுகிறது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பிற்கு அழம்
தெரியவேண்டுமா! உன்
துன்பத்தை பகிர்ந்து பார்
மற்றவர்  உள்ளத்தின் உயரம்
புரிந்துவிடும் !!

Saturday, 7 November 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏழ்மை என் சிறகுகளை
பிடிங்கிய போது வலிக்கவில்லை
பசி என் இளமையை
 பிடிங்கிய போது வலிக்கவில்லை
கருணையற்ற மனிதன்
கற்பனையில் கலங்கடிதபோது
வலிக்கவில்லை
எதிர்காலம் கற்பனையான போது
வலிக்கவில்லை
மகனே ! நீ என் நம்பிக்கையை
அறுத்தபோது மனசுவலிக்குதடா
அனாதையானதாய் துடிக்குதடா
யாருமற்ற வனமாகி
இந்த உயிர் தவிக்கு தடா
 இறுதி நம்பிக்கையும்   மண்ணில்
இறந்துவிட்டதாய் கண்ணீர் வடியுதடா
இருந்தும் உயிர் உனக்காய் இன்னும்
துடிக்குதடா!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொரு பெண்ணின்
பலவீணங்கள் ஒவ்வொரு
ஆண்னின் பலதின்
அந்திவாரமாகின்றது!
ஒவ்வொருபெண்ணின்
 முட்டாள் தனமே ஒவ்வொரு
ஆண்ணின் தவறுகளாகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு நேசத்தின் ஆழம்
ஒரு துன்பத்தின் கைக்குட்டை
ஒரு பொய்யின் ஆழம்
ஒரு கண்ணீர்துளியின் அளவுகோல்!!

Friday, 6 November 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஓராயிரம் வலிகண்டும்
இதயமட்டும் துடிக்கின்றது
இன்னும்!இதயவலி
வந்திருந்தால் ஓராயிரம்
வலியும் வந்திருக்காது!!!