
நாளை என்பது
நாளையைத்தேட நான்
எங்கேயெனத் தெரியாத
நாளில்!! இன்றைய கண்ணீர்
தடுத்திட முடியாப்பொழுதின்
இருள்காட்டுக்குள் மறைந்தே
கிடக்கின்றது
சொல்லிடமுடியாமல்
தனியே! தூக்கி வீசப்படட
உதயமாய்!!மேகத்தை
தென்றல்! தொட்டிழுப்பதை போல்
என் வாழ்க்கைதனை இழுத்திட
கைகள் இல்லாமல்
தூக்கி ஏறிந்த குப்பையைபோல்
கிடக்கின்றது தனியாய்!!
இருளைத் துளைக்கும்
நிலவிற்கு மட்டும்
மின்னும் என் கண்ணீர்த்துளிகள்
பார்த்தே நிலவும்
கடந்து போகும்
தேய்பிறைக்காலமாய் போல் !!!