Wednesday, 31 October 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பழமையில் புதுமை
தேடி
புதுமையிலும் புதுமை
தேடி
புதிதாய் ஒர் வாழ்வை
தேடி
பண்பில்லா பண்பில்
சேர்ந்து
பரிகாசம் தன்னைச்
சுமந்து
உறவிற்கே உறவு
சொல்லி
முறையே இல்லா
உறவில் சேர்ந்து
தேடலினால் தேடிக்
கொண்டோம்
பொறுமையில்லா இதயம்
கொண்டு
சொல்ல முடியா
பாதை ஒன்றை
புதிய வாழ்கையென்று………

Friday, 26 October 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


ராமன் தீயெடுக்க
சீதை குளித்தால் இன்று
இராவணர்கள் தீயெடுக்க
சீதைகள் குளிக்கின்றனர்

இதிகாசம் கண்ட தீயால்
கலியுகமும் குளிக்க
பணகார முதலைகள்
எடுத்த தீயில்
வறுமைத் தவிப்புக்கள்
நித்தம் குளிக்கின்றது

வரதட்சனை மாமியார்
வைத்த தீயில் மருமகள்
மட்டும் குளிக்க
வரன் காணா கன்னியவளை
ஏக்க தீ சுட்டெறித்தால்
மரணத் தீ அவள் குளிக்க

கோழையவன் எடுத்த தீயில்
குடும்பமே குளித்துக் கரைய
கடவுள் அவன் காட்டிய தீ
கருணையில்லா மனிதர்கள்
வைக்கும் தீயானது............

Wednesday, 24 October 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உன்னத பந்தம் ஒன்று
உன்னோடு எனைச் சேர்க்க
உன் கரம் பற்றியதால்
உன் உறவாய் நான் வந்தேன்
உன்னோடு !1
பலர் வாழ்ந்த வாழ்கை  
நமைச்சேர 
இணையான துணையாக
நம் வாழ்வில் நாம் சேர்ந்தோம்
மகிழ்வாய் 
மகிழ்சியாய் சில நாட்கள்
மகிழ்ந்தே போக ,
சத்தியம் தனை செய்து
 ,அன்போடு
எனை அணைத்த, 
இன்ப நாட்கள் 
கசந்ததேன் நமக்கு!! 
இப்போது! 
நம் உறவு புரியவில்லை,
எனக்கும் தான்
 எதுவுமே கூறாமல்
வார்த்தையால் எனைக்
 கொன்று
சாக்கடையாய் நீ 
பார்க்க
என்ன தான் 
நான் செய்தேன்!
இரட்டை வேடம்
 நீ போட்டு
அழகாய் நடிக்க
 உன் வேடம் தெரிந்தும் 
புரியாமல் நான்
தவிந்து இன்னும் வாழ
என்ன பாவம் 
நான் செய்தேனே
தெரியவில்லை எனக்கும்
 தான்!
வில்லனவன் வெளியிலென்றால்
உன்னிடம் சொல்லலாமே
வில்லனோ நீயென்றால்
நான் யாரிடம் 
 தான் சொல்ல
துணையாய் வந்த

 என் அன்பே
நீ கூறு கொஞ்சம்.............

Tuesday, 23 October 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஆயிரம் ஆயிரம்
மனிதப் பூக்கள்;! பூக்களாய்
பூத்துக் குலுங்கிய என்
தோட்டத்தில்
யுத்தமென்னும் அரக்கன்
உடல் சிதறக் குண்டெறிந்து
உயிர்ப் பலியெடுத்து
அழிவின் மேல் அழிவு செய்து
பசியோடும் வலியோடும்
என் உறவை என் நட்பை
தவிக்க விட்டு!என் தோட்டத்தின்
அழகை ச் சுடுகாடாக்கி
எம் மிடத்தில் எம் மினத்தை
காக்கின்றான் சமாதான உயிர் குடித்து


சொல்லிச் சொல்லி மாண்டு
காயத்தின் மேல் காயத்தால்
கருகிய வாழ்வு ஒளிறின்றி போக
எங்கோர் முலையில்
உறவுகளின் நம்பிக்கை
மட்டும் உயிர் வாழ்கின்றது
என்றும் மாறாமல்........


Monday, 22 October 2007

தோல்விகள்

ற்பனையின் அழகு என்றும்
நிஜத்தின் தோல்வி
பொய்யின் அழகு என்றும்
உண்மையின் தோல்வி
போலியின் அழகு என்றும்
உறவின் தோல்வி
ஏமாற்றத்தின்
அழகு என்றும்
நம்பிக்கையின்
தோல்வி


சந்தேகத்தின்
அழகு என்றும்
மகிழ்ச்சியின்
தோல்வி
ஆடம்பரத்தின்
அழகு என்றும்
அமைதியின் தோல்வி
பிரிவின் அழகு என்றும்
வாழ்வின் தோல்வி
யுத்தத்தின் அழகு என்றும்
மனிதனின் தோல்வி
சிந்தனையின் அழகு என்றும்
கடவுளின் தோல்வி!