Wednesday, 31 October 2007
Friday, 26 October 2007
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
ராமன் தீயெடுக்க
சீதை குளித்தால் இன்று
இராவணர்கள் தீயெடுக்க
சீதைகள் குளிக்கின்றனர்
இதிகாசம் கண்ட தீயால்
கலியுகமும் குளிக்க
பணகார முதலைகள்
எடுத்த தீயில்
வறுமைத் தவிப்புக்கள்
நித்தம் குளிக்கின்றது
வரதட்சனை மாமியார்
வைத்த தீயில் மருமகள்
மட்டும் குளிக்க
வரன் காணா கன்னியவளை
ஏக்க தீ சுட்டெறித்தால்
மரணத் தீ அவள் குளிக்க
கோழையவன் எடுத்த தீயில்
குடும்பமே குளித்துக் கரைய
கடவுள் அவன் காட்டிய தீ
கருணையில்லா மனிதர்கள்
வைக்கும் தீயானது............
Wednesday, 24 October 2007
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
உன்னத பந்தம் ஒன்று
உன்னோடு எனைச் சேர்க்க
உன் கரம் பற்றியதால்
உன் உறவாய் நான் வந்தேன்
உன்னோடு !1
பலர் வாழ்ந்த வாழ்கை
உன்னோடு எனைச் சேர்க்க
உன் கரம் பற்றியதால்
உன் உறவாய் நான் வந்தேன்
உன்னோடு !1
பலர் வாழ்ந்த வாழ்கை
நமைச்சேர
இணையான துணையாக
நம் வாழ்வில் நாம் சேர்ந்தோம்
நம் வாழ்வில் நாம் சேர்ந்தோம்
மகிழ்வாய்
மகிழ்சியாய் சில நாட்கள்
மகிழ்ந்தே போக ,
மகிழ்சியாய் சில நாட்கள்
மகிழ்ந்தே போக ,
சத்தியம் தனை செய்து
,அன்போடு
எனை அணைத்த,
எனை அணைத்த,
இன்ப நாட்கள்
கசந்ததேன் நமக்கு!!
இப்போது!
நம் உறவு புரியவில்லை,
எனக்கும் தான்
எனக்கும் தான்
எதுவுமே கூறாமல்
வார்த்தையால் எனைக்
வார்த்தையால் எனைக்
கொன்று
சாக்கடையாய் நீ
சாக்கடையாய் நீ
பார்க்க
என்ன தான்
என்ன தான்
நான் செய்தேன்!
இரட்டை வேடம்
இரட்டை வேடம்
நீ போட்டு
அழகாய் நடிக்க
அழகாய் நடிக்க
உன் வேடம் தெரிந்தும்
புரியாமல் நான்
தவிந்து இன்னும் வாழ
என்ன பாவம்
தவிந்து இன்னும் வாழ
என்ன பாவம்
நான் செய்தேனே
தெரியவில்லை எனக்கும்
தெரியவில்லை எனக்கும்
தான்!
வில்லனவன் வெளியிலென்றால்
உன்னிடம் சொல்லலாமே
வில்லனோ நீயென்றால்
நான் யாரிடம்
வில்லனவன் வெளியிலென்றால்
உன்னிடம் சொல்லலாமே
வில்லனோ நீயென்றால்
நான் யாரிடம்
தான் சொல்ல
துணையாய் வந்த
துணையாய் வந்த
என் அன்பே
நீ கூறு கொஞ்சம்.............
Tuesday, 23 October 2007
கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,
மனிதப் பூக்கள்;! பூக்களாய்
பூத்துக் குலுங்கிய என்
தோட்டத்தில்
யுத்தமென்னும் அரக்கன்உடல் சிதறக் குண்டெறிந்து
உயிர்ப் பலியெடுத்து
அழிவின் மேல் அழிவு செய்து
பசியோடும் வலியோடும்
என் உறவை என் நட்பை
தவிக்க விட்டு!என் தோட்டத்தின்
அழகை ச் சுடுகாடாக்கி
எம் மிடத்தில் எம் மினத்தை
காக்கின்றான் சமாதான உயிர் குடித்து
சொல்லிச் சொல்லி மாண்டு
காயத்தின் மேல் காயத்தால்
கருகிய வாழ்வு ஒளிறின்றி போக
எங்கோர் முலையில்
உறவுகளின் நம்பிக்கை
மட்டும் உயிர் வாழ்கின்றது
என்றும் மாறாமல்........
Monday, 22 October 2007
தோல்விகள்
கற்பனையின் அழகு என்றும்
நிஜத்தின் தோல்வி
பொய்யின் அழகு என்றும்
உண்மையின் தோல்வி
போலியின் அழகு என்றும்
உறவின் தோல்வி
ஏமாற்றத்தின் அழகு என்றும்
நம்பிக்கையின் தோல்வி
நிஜத்தின் தோல்வி
பொய்யின் அழகு என்றும்
உண்மையின் தோல்வி
போலியின் அழகு என்றும்
உறவின் தோல்வி
ஏமாற்றத்தின் அழகு என்றும்
நம்பிக்கையின் தோல்வி
Subscribe to:
Comments (Atom)
.jpg)
.jpg)
.jpg)