Saturday, 5 June 2010

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

துயில்கின்ற   இரவுக்குள்  
உறக்கிடா    விழிகளில்
கரையாத   கனவுக்குள் 
களைகின்ற  இரவைக்கலைத்து 
விடியாது பிறந்த 
என் பிறவாத உதயமோ! 

என் புலராத பொழுதிற்குள்
இருளாகி விளையாடியே 
புரியாத வாழ்வாக்கி
புதிரான விடையாக்கி
விளையாத  விதையாக்கி 
உதிக்காத உணர்வாகி  
என் மனதோடு
மோதி சொத்திட்ட உதயமோ!


என் நெஞ்சாகி  நெஞ்சம கொஞ்சும் 
 மொழியழித்த  நினைவாகி 
கண்ணீராகி  முற்தரையாகி முள்ளாகி 
கல்லாகி கல்பட்ட வலியாகி
கதையாகி கருணையில்லா 
பெண்ணாக்கி கலையிழந்து 
ஒய்வின்றிஒய்ந்திடா  
இதயமான பின் உதிக்காத  உதயமே !!
எடுத்தெரித்து ஒளியிழந்து
இருளுக்குள் சிரிப்பதேனோ....................